ADDED : பிப் 01, 2026 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் அருகே சமுத்திராபட்டியில் திண்டுக்கல் தெற்கு மாவட்ட த.வெ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் தலைமை வகித்தார். மத்திய ஒன்றியச் செயலாளர் சீத்தாராமன் முன்னிலை வகித்தார்.
இதில் சமுத்திராபட்டி, வேலம்பட்டி, பூதகுடி, ஆவிச்சிபட்டி ஊராட்சிகளில் ரோடு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டன. ஆர்ப்பாட்டத்தில் மத்திய ஒன்றிய இணைச் செயலாளர் வினோத் குமார், நிர்வாகிகள் அருள்பாண்டி, பிச்சைமணி, கதிரவன், செந்தில்குமார் உள்ளிட்ட தமிழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

