/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஹி.ம.க., நிர்வாகியை தாக்கிய இருவர் கைது
/
ஹி.ம.க., நிர்வாகியை தாக்கிய இருவர் கைது
ADDED : மார் 28, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை முத்து நகரை சேர்ந்தவர் பாலமுருகன் 42. ஹிந்து மக்கள் கட்சி நகர செயலாளராக உள்ளார்.
நேற்று காலை ஏ.வி.பட்டி ரோட்டில் மந்தைகுளம் அருகே நடந்து சென்றபோது மோர்பட்டி பிரவீன்குமார் 24 ,தினேஷ்கண்ணன் 28, ஆகியோர் தங்களுக்குள் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதை விலக்கிவிட முயன்றதால் ஆத்திரமடைந்த அவர்கள் பாலமுருகனை தாக்கி மண்டையை உடைத்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்கிய இருவரையும் வடமதுரை போலீசார் கைது செய்தனர்.