UPDATED : செப் 02, 2026 07:42 PM
ADDED : செப் 02, 2026 07:34 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:கோட்டூர்- ஆவாரம்பட்டி ரோடு தாமரைக்குளத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதாக தாடிக்கொம்பு போலீசாருக்கு புகார் வந்தது.
இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது முறையான ஆவணங்கள், அனுமதி இன்றி மண் அள்ளிய கோட்டூர் ஆவாரம்பட்டியை சேர்ந்த கோபி 48, மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி வீரமுத்து 30, ஆகிய இருவரை கைது செய்தனர். மண் அள்ள பயன்படுத்திய ஜே.சி.பி., இயந்திரம், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
