sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாநகராட்சியில் ரூ.4.69 கோடி மோசடி: மேலும்   இருவர் கைது

/

மாநகராட்சியில் ரூ.4.69 கோடி மோசடி: மேலும்   இருவர் கைது

மாநகராட்சியில் ரூ.4.69 கோடி மோசடி: மேலும்   இருவர் கைது

மாநகராட்சியில் ரூ.4.69 கோடி மோசடி: மேலும்   இருவர் கைது


ADDED : ஏப் 26, 2025 03:01 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.69 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இம்மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப் பணம் 4.69 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மாநகராட்சி கமிஷனர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வரி வசூல் மைய இளநிலை உதவியாளர் சரவணனை கைது செய்தனர். மோசடியை கண்டறிந்து தடுக்கத் தவறியதாக கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஷ், நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

சில மாதங்களாக இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், எஸ்.பி., பிரதீப் மேற்பார்வையில், டி.எஸ்.பி., குமரேசன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் அடுத்தகட்ட விசாரணையை தொடங்கினர் .அதன்படி மோசடி செய்த பணத்தில் சரவணனிடம் தலா ரூ.30 லட்சம் பெற்றதாக திண்டுக்கல்லை சேர்ந்த இளஞ்செழியன்35, ஸ்ரீராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளரான சாணார்பட்டி முரளி 41 , ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் கூறியதாவது:

கைதான இளஞ்செழியன் , முரளி மோசடி பணத்தில் சொத்துக்களை வாங்கி உள்ளனர். அவற்றை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதில் மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.






      Dinamalar
      Follow us