நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: அரியபந்தம்பட்டியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ஸ்ரீதர் 21. நண்பர்களுடன் ஊருக்கு நடந்து சென்றார். வேடசந்துார் குப்பை கிடங்கு அருகே சென்றபோது சிறுநீர் கழித்துள்ளார்.
டூவீலரில் வந்த இருவர் அட்ரஸ் கேட்பது போல் பேசி ஸ்ரீதரின் அலைபேசியை பறித்துக்கொண்டு தப்பினர். ஸ்ரீதர் கூச்சலிட முன்னாள் சென்ற நண்பர்கள் திருடர்களை பிடித்து வேடசந்துார் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பெரியகுளத்துப்பட்டியை சேர்ந்த சுபாஷ் 21, 16 வயது பள்ளி சிறுவன் என்பது தெரிந்தது. இரு வரையும் கைது செய்தனர்.

