ADDED : அக் 06, 2025 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு : வடமதுரை யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி 67. டூவீலரில் அனுமந்தராயன் கோட்டையில் உள்ள தனது மகளைப் பார்க்கச் சென்றார். மதுரை - சேலம் நான்கு வழி சாலையில், அஞ்சலி பைபாஸ் அருகே சென்ற போது, அதே திசையில் வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
டூவீலரில் வந்து மோதிய கர்நாடக மாநிலம் பெங்களூரில் குடியிருந்து வரும், இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த அர்மான் பரத்வாஜ் என்பவர் மீது, தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.