/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விபத்தில் அந்தரத்தில் பறந்த டூவீலர்
/
விபத்தில் அந்தரத்தில் பறந்த டூவீலர்
ADDED : மார் 18, 2026 05:57 AM
சாணார்பட்டி: விபத்தில் டூவீலர் அந்தரத்தில் பறந்து சென்று விழுந்த நிலையில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
மேட்டுக்கடையை சேர்ந்தவர் பாலதண்டாயுதம். இவரது மகள் கீர்த்திகா 9. இவரை நேற்று காலை பள்ளிக்கு டூவீலரில் அழைத்து சென்ற பாலதண்டாயுதம் அங்குள்ள ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது பின்னால் வந்த டூவீலர் மோதியதில் கீர்த்திகா காயமடைந்தார். பாலதண்டாயுதம், மற்றொரு டூவீலரில் வந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா 23, லேசான காயம் அடைந்தனர். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் ஜெயசூர்யா ஓட்டி வந்த டூவீலர் தானாக ரோட்டில் ஓடியதுடன் அந்தரத்தில் பறந்து சென்று கட்டடத்தின் மீது மோதி விழுந்தது. இக் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாக இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

