/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பராமரிப்பின்றி பாழ்... நிர்கதியான நீர்நிலைகள்
/
பராமரிப்பின்றி பாழ்... நிர்கதியான நீர்நிலைகள்
ADDED : டிச 04, 2025 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் பராமரிப்பின்றி பாழாக்கப்பட்டு வருகின்றன. முறையாக துார்வாராததால் மழைநீர் தேக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. ஆகாயதாமரை செடிகள் ஆக்கிரமித்து நீராதாரத்தை வீணாக்குகின்றன.
இதோடு நிலத்தடி நீருக்கும் பேராபத்தை ஏற்படுத்துகிறது. போதாகுறைக்கு கருவேல மரங்கள் வேறு. இது போன்ற நிலையை தவிர்க்க பராமரிப்பு அரசு துறைகள் நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்க்கிறது.

