sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பயனில்லா கழிப்பறை; புதர் மண்டிய சாக்கடைகள் சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு மக்கள்

/

பயனில்லா கழிப்பறை; புதர் மண்டிய சாக்கடைகள் சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு மக்கள்

பயனில்லா கழிப்பறை; புதர் மண்டிய சாக்கடைகள் சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு மக்கள்

பயனில்லா கழிப்பறை; புதர் மண்டிய சாக்கடைகள் சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு மக்கள்


ADDED : ஜூன் 08, 2025 05:02 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- ஒட்டன்சத்திரம்: பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத பொது சுகாதார வளாகம், புதர் மண்டிய சாக்கடை என ஒட்டன்சத்திரம் நகராட்சி 2 வது வார்டில் பிரச்னைகள் அதிகம் உள்ளன.

செல்லப்பகவுண்டன் புதுஆர், நாகணம்பட்டி, பெரியாஞ்செட்டிபட்டி, இருளகுடும்பன் பட்டி ஆகிய பகுதிகளை கொண்ட இந்த வார்டில் குப்பை கிடங்கு பயன்பாட்டில் உள்ளதால் குப்பை அள்ளப்படுகிறது. குப்பை அள்ளப்படும் வரை நாகணம்பட்டி தொடக்கப்பள்ளி அருகே குவிக்கப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

பெரியாஞ்செட்டிபட்டி, இருளகுடும்பன்பட்டி பகுதிகளில் பொது கழிப்பிட வசதி இல்லை. விளைநிலங்கள் பிளாட்களாகி விட்டதால் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதிலும் பெண்களுக்கு சிக்கல் உள்ளது. வாய்க்காலில் பல இடங்களில் புற்கள் முளைத்துள்ளன.

நாகணம்பட்டி பகுதியில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் நாகணம் பட்டியிலிருந்து புதிய பைபாஸ் ரோடு செல்லும் ரோடு திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. இப்பகுதியில் உள்ள சாக்கடை தூர்வாரப்பட்டும் தற்போது பெய்த மழையில் புல் பூண்டுகள் மூடி உள்ளது. கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. அடிக்கடி கொசு மருந்து அடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய பைபாஸ் ரோட்டில் பாலத்தை அகலப்படுத்தி அதன் கீழ் செல்லும் வடிகாலை பெரிதாக்க வேண்டும். நாகணம்பட்டி பைபாஸ் ரோட்டில் வடிகால் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளதால் விளை நிலங்களில் மழை நீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது.

கொசு தொல்லை அதிகம்


ஜெயக்குமார், பா.ஜ., சக்தி கேந்திர பொறுப்பாளர், ஒட்டன்சத்திரம்: நாகணம்பட்டி பைபாஸ் ரோட்டில் சேதமடைந்த இடங்களை சீர் செய்து ஆபத்து இல்லாத பயணத்திற்கு உதவ வேண்டும். கொசு மருந்து அடிக்காமல் இருப்பதால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. நகராட்சி குடிநீர் சரியாக வருவதில்லை. சுகாதார பணியாளர்கள் குப்பை வாங்க வருவதில்லை. இதனால் பொதுமக்கள் பள்ளி அருகே ரோட்டில் குப்பையை கொட்டி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

பயன்படுத்தாத சுகாதார வளாகம்


விஜய ரமனேஸ்வரன், வழக்கறிஞர், ஒட்டன்சத்திரம் : நாகணம்பட்டி சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் இன்னும் சரி வர பயன்படுத்தவில்லை. திறந்தவெளி பயன்பாட்டை போக்க கழிப்பறையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டுக்குள் உள்ள குறுகிய சாக்கடைகளில் கழிவு நீர் தேங்காமல் இருக்க அவற்றை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாக்கடை தினமும் சுத்தம்


அருள்மணி, கவுன்சிலர் (தி.மு.க.,): நாகணம்பட்டியில் உள்ள கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்வதில்லை. முறையாக பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதை துாய்மையாக வைத்துக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். குப்பை தினமும் வாங்கப்படுகிறது. கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. ரோட்டின் கீழ் உள்ள தண்ணீர் செல்லும் பாதையை பெரிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us