ADDED : மே 12, 2026 01:19 AM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்: கொடைக்கானல் வரும் பழநி, வத்தலக்குண்டு ரோடுகளின் ஓரம் காய்ந்த, உறுதியற்ற மரங்கள் ஏராளமாக உள்ளன. வனம், பட்டா நிலங்களில் அமைந்துள்ள இம்மரங்கள் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
நகரில் பாம்பார்புரம், அப்சர்வேட்டரி உள்ளிட்ட சுற்றுலா முக்கியம் வாய்ந்த ரோடுகளிலும் ஏராளமான மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. சீசனுக்கு முன் மலைப்பகுதியில் விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும்.
