
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: செங்குறிச்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் 550 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகளுடன், கால்நடைகளுக்கு தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன. கிடேரி கன்றுகள் வளர்த்த 3 விவசாயிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மண்டல இணை இயக்குனர் விஷ்ணுகந்தன், துணை இயக்குனர் திருநாவுக்கரசு, உதவி இயக்குனர் சரவணகுமார், கால்நடை உதவி இயக்குனர் ஜெயராஜ், டாக்டர் சிங்கமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

