/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் வைகாசி விசாக பால்குட ஊர்வலம்
/
பழநியில் வைகாசி விசாக பால்குட ஊர்வலம்
ADDED : ஜூன் 10, 2025 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கந்தன் அருள் அறக்கட்டளை சார்பில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
பெரிய நாயகி அம்மன் கோயிலில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக திருஆவினன்குடி கோயிலில் நிறைவடைந்தது. அதன் பின் குழந்தைவேலாயுதசுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. ஊர்வலத்தில் மலேசியா ஜெயப்பிரகாஷேந்திர சரஸ்வதி சுவாமிகள், கந்த விலாஸ் நிறுவன உரிமையாளர் செல்வகுமார் ,பழநி சங்கர மடம் பாலசுப்பிரமணிய சுவாமிகள், சிவக்குமார், ஆடிட்டர் அனந்த சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்