ADDED : நவ 18, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி: மதுரையை சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி 49, மனைவி அமுதா 42, உடன் பழநி அருகே கோயிலுக்கு புறப்பட்டனர்.
கன்னிவாடி மேல்நிலைப்பள்ளி வேகத்தடை அருகே, கோவை ரத்தினபுரியில் இருந்து செம்பட்டி நோக்கி வந்த வேன் பின்புறமாக மோதி அங்குள்ள சுவற்றில் மோதி நின்றது. கணவன், மனைவி பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வேன் டிரைவர் உதயகுமார் 40, காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கன்னிவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

