ADDED : டிச 15, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு கொண்டாட்டம், பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட தேசிய சிந்தனை பேரவை சார்பில் மகாகவி பாரதியும், வந்தே மாதரமும் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
பேரவை முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் குப்புசாமி தலைமை வகித்தார்.
மாநில அமைப்பாளர் முரளி, தென்தமிழக அமைப்பாளர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை திண்டுக்கல் ஜில்லா நிர்வாகி ராஜ்மோகன் செய்திருந்தார்.

