ADDED : ஜன 30, 2026 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நிலக்கோட்டை கிளை வட்ட மைய தலைவர் கணேசன் தலைமையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதற்கு ஆதரவாக நிலக்கோட்டை தாசில்தார் ஜெயபிரகாஷ் ,வருவாய் துறை அதிகாரிகள் பேசினர். வட்ட மைய செயலாளர் தெய்வேந்திரன், பொருளாளர் ஜெயலட்சுமி, துணைத் தலைவர் மகேஸ்வரன், மாவட்ட அமைப்பு பொறுப்பாளர் சகீராபானு, துணைச் செயலாளர் அலாவுதீன் பங்கேற்றனர்.

