ADDED : ஜன 25, 2026 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் வரதமா நதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வரதமாநதி அணையிலிருந்து ஆயக்குடி, பெரியகுளம் வீரகுளம், பாப்பன்குளம், மாப்பிள்ளை நாயக்கர் குளம், ஆயக்குடி பெரிய வாய்க்கால், பாப்பன் வாய்க்கால், கோதை அணைக்கட்டு நேரடி வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. 3077 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். மார்ச் 21 வரை 89.51 மில்லியன் கன அடிக்கு மிகாமல் ஆர்.டி.ஓ .,கண்ணன் தலைமையில் திறந்து விடப்பட்டது. செயற்பொறியாளர் பாலமுருகன் ,உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கம் பங்கேற்றனர்.

