/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பனிப்பொழிவால் விளக்குகளை எரியவிட்டு சென்ற வாகனங்கள்
/
பனிப்பொழிவால் விளக்குகளை எரியவிட்டு சென்ற வாகனங்கள்
பனிப்பொழிவால் விளக்குகளை எரியவிட்டு சென்ற வாகனங்கள்
பனிப்பொழிவால் விளக்குகளை எரியவிட்டு சென்ற வாகனங்கள்
ADDED : டிச 12, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அதிக பனிப்பொழிவின் காரணமாக புறநகர் நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் தென் மாவட்டங்களின் நுழைவு பகுதியாக இருக்கிறது.
புறநகர் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனப்போக்குவரத்து எப்போதும் அதிகளவில் இருக்கும். சில தினங்களாக மாவட்டம் முழுவதும் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.அதன்படி நேற்று காலை முதல் பனிப்பொழிவால் ரோடுகள் புகைமூட்டம் போல் காட்சியளித்தன.
முன்னால் சென்ற வாகனங்கள் தெரியாததால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

