/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேம்பார்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா
/
வேம்பார்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா
ADDED : ஜூன் 11, 2025 06:47 AM

கோபால்பட்டி : வேம்பார்பட்டி காளியம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இவ்விழா ஜூன் 3ல் சுவாமி சாட்டுதல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் ,அலங்கார பூஜைகள் நடந்தது. நேற்று கொடியேற்றம் கிராம தேவதைகளுக்கு பழம் வைத்து வழிபடுதல், அம்மன் அலங்காரப் பெட்டி வானவேடிக்கையுடன் எடுத்து செல்லுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
இன்று அதிகாலை முளைப்பாரியுடன் அம்மன் சன்னதி வர அக்கினி சட்டி , மாவிளக்கு, பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவர். நாளை மஞ்சள் நீராட்டுத்துடன் அம்மன் நகர்வலம் வந்து பூஞ்சோலை செல்வதுடன் விழா நிறைவு பெறுகிறது.