/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விதிமீறல்களால் விபரீதம்... கானல்நீரான கண்காணிப்பு
/
விதிமீறல்களால் விபரீதம்... கானல்நீரான கண்காணிப்பு
ADDED : ஜூலை 17, 2025 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமபகுதிக்கு போதுமான பஸ் வசதி இன்றளவும் இல்லை. அப்படியே வந்தாலும் டிரிப்கள் அவ்வப்போது கட்டாகிறது.
இதனால் மக்கள் சரக்கு வாகனம் என கண்ணில் கண்ட வாகனங்களில் பயணிக்கும் நிலை தொடர்கிறது. தொழிலாளர்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வோரும் சரக்கு வாகனங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.விபரீதம் நடந்தால் நடவடிக்கை எடுக்கும் நிலையில் அதன் பின் கண்டுக்காததால் இந்நிலை தொடர்கிறது.