ADDED : ஏப் 03, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தலில் கல்லுாரி பயிலும் முதல் தலைமுறை வாக்காளர்களான மாணவர்களிடம் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி அய்யலுார் பூனைக்கரடு தேவாங்கு பாதுகாப்பு மையத்தில் நடந்தது. பயிற்சி சப்
கலெக்டர் வினோதினி துவக்கி வைத்தார். பங்கேற்ற மாணவர்கள் ஓட்டு 100 சதவீதம்' என்ற ஆங்கில எழுத்து வடிவில் மனித சங்கிலி வரிசையில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, வனச்சரகர் முருகேசன் பங்கேற்றனர்.
