ADDED : டிச 28, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : -நத்தத்தில் வ.உ.சி., இளைஞர் பேரவை சார்பில் மாரத்தான் போட்டி நடந்தது . மூத்த நிர்வாகிகள் சரவணசெல்வம், சிவலிங்கம், ராமச்சந்திரன் தொடங்கி வைத்தனர். 100-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு , கேடயம் வழங்கப்பட்டது.
மகளிர் சுய உதவிக் குழு அங்கன்வாடி மையம் திறப்பு, இலவச மருத்துவ முகாம்,ரத்ததான முகாம்கள் நடந்தது. வ.உ.சி இளைஞர் பேரவை மாநில தலைவர் மின்னல்பிள்ளை, கொள்கை பரப்பு செயலாளர் சரவணச்செல்வம், துணை செயலாளர் தியாகராஜன், அமைப்பு செயலாளர் ரமேஷ்குமார், இளைஞரணி செயலாளர்கள் வெற்றிவேலன், செந்தில்குமார், அருள் கலந்து கொண்டனர்.இதை தொடர்ந்து முப்பெரும் விழா , சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவும் நடந்தது.

