ADDED : பிப் 21, 2025 06:32 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: சவேரியார் பாளையம் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். வீடில்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ,இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் திண்டுக்கல் நத்தம் ரோடு கிழக்கு தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் பிரபாகரன், செயற்குழு உறுப்பினர் ஆஸாத், மாநகர செயலாளர் அரபுமுகமது, மாவட்ட குழு உறுப்பினர் கணேசன், கவுன்சிலர் ஜோதிபாசு, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஜெயசீலன் பங்கேற்றனர்.
