ADDED : மே 06, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் முதுநிலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இளநிலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதை கண்டித்து, திண்டுக்கல் கோட்ட அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பாண்டி தலைமை வகித்தார். செயலாளர் வேல்முருகன், மாவட்ட தலைவர் ஜோதி முருகன் பங்கேற்றனர்.