ADDED : ஆக 19, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; திண்டுக்கல்லில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய ஒப்பந்த நிலுவைகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் அரசு போக்குவரத்து பணிமனை கிளை 1 முன்பாக சி.ஐ.டி.யு., போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மத்திய சங்கத்தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராமநாதன், நிர்வாகிகள் வெங்கிடுசாமி, மணிகண்டன் பேசினர். பாலச்சந்திரபோஸ், கணேசன், ஜெயசீலன் கலந்துகொண்டனர்.