/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வக்ப் மசோதாவுக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு
/
வக்ப் மசோதாவுக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு
ADDED : ஏப் 07, 2025 07:18 AM
பாலசமுத்திரம்: பழநி, பாலசமுத்திரத்தில் வக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேறியதை வரவேற்று பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பழநி பாலசமுத்திரம் பேரூராட்சியில் 96 ஏக்கரில் உள்ள இடம் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என பத்திரப்பதிவு முடக்கி வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சொத்துக்களை விற்க, வாங்க, வங்கிகளில் அடமானம் வைக்க, பாகப்பிரிவினை செய்ய இயலாத நிலை இருந்தது. பா.ஜ.,சார்பில் பல்வேறு போராட்டங்கள், கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டன. பா.ஜ.,வினர், பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர். பா.ஜ., கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் சேகர், துணைத் தலைவர் பிரியங்கா, விவசாய அணி துணைத் தலைவர் நடராஜ் கலந்து கொண்டனர்.

