ADDED : மே 20, 2025 01:12 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாரதிய கைத்தறி நெசவுத் தொழிலாளர் பேரவைக் கூட்டம் நடந்தது.மாநிலத் தலைவர் நடராசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பாபுலால் முன்னிலை வகித்தார்.
கைத்தறி ரகங்களை விசைத்தறியில் செய்வதை உடனடியாக தடுக்க வேண்டும், நெசவாளர்களுக்கு கூட்டுறவு வங்கி அமைக்க வேண்டும், விவசாயிகளுக்கு கிசான் சம்மான் நிதி வழங்கப்படுவது போன்று நெசவாளர்களுக்கும் 3 தவணையாக ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாகவேல், பிரகாஷ், பாலசுந்தரம், ஜனார்த்தனன், தவமணி பங்கேற்றனர். மாநிலச் செயலாளர் ஜனார்த்தனன் நன்றி கூறினார்.
