ADDED : பிப் 07, 2024 06:55 AM
ரெட்டியார்சத்திரம் : ராமலிங்கம்பட்டி போகர் நகர் பாதாள செம்பு முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் விளையாட்டு வீரர்கள்,ஏழைகளுக்கு நல உதவி கள் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் பல்வேறு விடுதிகளில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான ரூ.5 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் கோயில் நிர்வாகிகள் சார்பில் கலெக்டர் பூங்கொடியிடம் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கான பாய் போர்வை தலையணை உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றிருந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், பறக்கும் படை தனி தாசில்தார் அபுரிஸ்வான் உடன் இருந்தனர். முன்னதாக ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட பொருட்கள் நல உதவிகளாக வழங்கப்பட்டது. கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என, கோயில் நிர்வாகி அறிவானந்த சுவாமி தெரிவித்தார்.

