/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஏழு ஆண்டுகளாக அச்சமூட்டும் சத்தத்திற்கு என்ன தான் காரணம்?
/
ஏழு ஆண்டுகளாக அச்சமூட்டும் சத்தத்திற்கு என்ன தான் காரணம்?
ஏழு ஆண்டுகளாக அச்சமூட்டும் சத்தத்திற்கு என்ன தான் காரணம்?
ஏழு ஆண்டுகளாக அச்சமூட்டும் சத்தத்திற்கு என்ன தான் காரணம்?
ADDED : ஏப் 18, 2025 01:44 AM

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சுற்று பகுதியில், ஏழு ஆண்டுகளாக அடிக்கடி வெடிச்சத்தம் கேட்டு, அதிர்வு ஏற்படுவது தொடர்ந்தாலும், அதற்கான காரணம் தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மாவட்டத்தின் வடமதுரை, வேடசந்துார், சாணார்பட்டி, திண்டுக்கல் பகுதிகளை மையமாக கொண்டு, 20 முதல் 40 கி.மீ., சுற்றளவில், அவ்வப்போது பகல் நேரங்களில் மட்டும், பயங்கர வெடிச்சத்தம் கேட்கிறது.
சத்தத்தை தொடர்ந்து, சில நேரங்களில் விமானங்கள் பறந்து செல்கிறது. பல நேரங்களில் அவ்வாறு பறப்பதில்லை. ஏழு ஆண்டுகளாக இது தொடர்ந்தாலும், வெடிச்சத்தத்திற்கான காரணம் குறித்து இதுவரை அப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை.
இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினமும் வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதேபோல், நேற்று காலையிலும் இரண்டு முறை, 10:42 மற்றும் 11:15 மணி அளவில், வெடிச்சத்தம் கேட்டு, வடமதுரை, எரியோடு சுற்றுப்பகுதி கிராமங்களில் மக்கள் அதிர்வை உணர்ந்துள்ளனர்.
இதையடுத்து, சிறிது நேரத்தில் பயிற்சி விமானம் ஒன்று பறந்துள்ளது. இதுகுறித்து, மக்களின் தேவையற்ற அச்சத்தை போக்க, மாவட்ட நிர்வாகம் விளக்கம் தர முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
'அதிக சத்தத்துடன் கூடிய அதிர்வு, நிலநடுக்கத்துடன் தொடர்புடையதல்ல என்பதால் பொதுமக்கள் அச்சப்படவோ, பீதியடையவோ தேவையில்லை' என, திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

