sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோடுகளில் திரியும் கால்நடைகளால் விபத்துக்கள் யாரை குற்றம் சொல்வதோ

/

ரோடுகளில் திரியும் கால்நடைகளால் விபத்துக்கள் யாரை குற்றம் சொல்வதோ

ரோடுகளில் திரியும் கால்நடைகளால் விபத்துக்கள் யாரை குற்றம் சொல்வதோ

ரோடுகளில் திரியும் கால்நடைகளால் விபத்துக்கள் யாரை குற்றம் சொல்வதோ

2


ADDED : ஜன 05, 2025 06:39 AM

Google News

ADDED : ஜன 05, 2025 06:39 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் முக்கிய ரோடுகள், நான்கு வழி சாலைகள், நெடுஞ்சாலைகள்,ரயில் பாதைகளில் சுதந்திரமாக உலா வரும் மாடுகள் விபத்தில் சிக்கி அவ்வப்போது உயிரைவிடுகின்றன. சாலையோரம் கொட்டப்படும் குப்பையை கிளறி பாலிதீன் துணிகள் போன்றவற்றை உட்கொள்கின்றன.

இதனால் மாடுகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

நகர் புறங்களில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லாததாலும், உணவு பற்றாக்குறையாலும் அதன் உரிமையாளர்கள் மாடுகளை கண்டு கொள்வதில்லை. அவை நடுரோட்டில் கூட்டமாக திரிவதால் வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.

கை கால் இழப்பு முதல் உயிரிழப்புகள் வரை நிகழ்கிறது. மருத்துவமனை வளாகங்கள் ,கோயில் ,பள்ளி என மாடுகள் சுற்றித் திரிவதால் சில நேரம் பள்ளி சிறுவர்களை தாக்குகிறது.

இதனால் பள்ளிகளுக்கு குழந்தைகளை அச்சத்துடன் அனுப்பும் நிலை உள்ளது. உள்ளாட்சி நிர்வாகங்களோ ரோட்டில் சுற்றி திரியும் மாடுகளை பறிமுதல் செய்கின்றனர்.

உரிமையாளர்கள் வரும் போது எச்சரித்து மாடுகளை ஒப்படைக்கின்றனர்.

சில உள்ளாட்சி அமைப்புகள் அதையும் கண்டு கொள்வதில்லை. இதனால் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை முறையாக பராமரிக்காமல் மீண்டும் ரோடுகளில் திரியவிடுகின்றனர்.

கால்நடைகளை முறையாக பராமரிக்காமல் ரோடுகளில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us