sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை' பிரையன்ட் பூங்காவிற்குள் புகும் காட்டு மாடுகள்: அச்சத்தில் பயணிகள்

/

'கொடை' பிரையன்ட் பூங்காவிற்குள் புகும் காட்டு மாடுகள்: அச்சத்தில் பயணிகள்

'கொடை' பிரையன்ட் பூங்காவிற்குள் புகும் காட்டு மாடுகள்: அச்சத்தில் பயணிகள்

'கொடை' பிரையன்ட் பூங்காவிற்குள் புகும் காட்டு மாடுகள்: அச்சத்தில் பயணிகள்


ADDED : ஜூலை 22, 2025 04:08 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 04:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா வளாக சுவர் சேதமடைந்து காட்டுமாடுகள் புகுவதால் சுற்றுலா பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.

மாவட்ட தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பிரையன்ட் பூங்காவிற்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். பத்து ஏக்கரில் உள்ள இப்பூங்காவில் மலர் படுகைகள் அமைத்து பூக்கள் பூத்து குலுங்கின்றன. ஆண்டுதோறும் மலர் கண்காட்சியும் நடப்பதால் அதிக வருவாய் ஈட்டும் பூங்காவாக உள்ளது.

பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்தி பூங்காவை ரசித்து இளைப் பாறுகின்றனர்.

இந்நிலையில் பூங்காவை சுற்றியுள்ள வளாக சுவர் ஆங்காங்கே சேதமடைந்து சீரமைக்கப்படாமல் நிழல் வலை அமைப்பு மூலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் வழியாக எளிதில் காட்டுமாடுகள் புகுந்து பயணிகளை அச்சுறுத்தி வருகின்றன.

மேலும் மலர்படுகைகள் சேதமடைந்து பூங்கா மலர் கட்டமைப்பும் சிதிலமடைந்து வருகிறது.

ஏராளமான பயணிகள் வரும் பூங்காவில் காட்டுமாடு, காட்டுபன்றிகள் அச்சுறுத்தல் தொடர்கிறது.

பயணிகளின் பாதுகாப்பு கருதி பூங்கா வளாக சுவரை கட்டமைக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us