/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் காட்டு யானை; விவசாயம் பாதிப்பு
/
'கொடை'யில் காட்டு யானை; விவசாயம் பாதிப்பு
ADDED : மே 06, 2025 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி பள்ளங்கி பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகளால் விவசாயம் பாதித்துள்ளது.
பழநி வரதமாநதி அடிவாரப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த யானைகள் பேத்துப்பாறை, பள்ளங்கி, கோம்பை, அலத்துரை உள்ளிட்ட பகுதிகளில் நடமாடி வருகிறது. சில தினங்களாக பத்துக்கும் மேற்பட்ட யானை கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்து அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. காட்டு யானைகளால் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். வனத்துறையினர் யானைகளை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

