ADDED : ஆக 08, 2025 01:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் நத்தம் ரோடு பொன்னகரம் அரவிந்த் நகரை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவரின் மனைவி குர்ஷித் பேகம் 60. இவர்களுடன் மகன் அம்ஜித் வசித்துவருகிறார்.
கணவர் ,மகன் வெளியூர் சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த குர்ஷித்பேகம் காஸ் அடுப்பை பற்றவைத்துள்ளார். காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் குர்ஷித் பேகம் உடல் கருகி இறந்தார். திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.