ADDED : மார் 07, 2026 06:50 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மகளிர் தின விழா நடந்தது. தலைமை எழுத்தர் அனுராதா வரவேற்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சுந்தரமகாலிங்கம் தலைமை வகித்தார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பஞ்சாபிகேசன் முன்னிலை வகித்தார். கணக்கர் காண்டீபன், உதவியாளர் கலைச்செல்வி உள்ளிட்டோர் மகளிரின் சிறப்பு, ஆற்றல் உள்ளிட்டவைகள் குறித்து பேசினர். பழநி வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார். பின் அனைவரும் இணைந்து 'கேக்' வெட்டி அனைவருக்கும் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
