/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் 3வது பாதை நீட்டிப்பு பணி துவக்கம்
/
வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் 3வது பாதை நீட்டிப்பு பணி துவக்கம்
வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் 3வது பாதை நீட்டிப்பு பணி துவக்கம்
வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் 3வது பாதை நீட்டிப்பு பணி துவக்கம்
ADDED : நவ 24, 2025 05:49 AM

வடமதுரை: வடமதுரை ரயில்வே ஸ்டேஷனில் 3வது பாதையை நீடிக்க மண் தளம் அமைக்கும் பணி துவங்கியது.
திண்டுக்கல் - விழுப்புரம் இருவழி ரயில் பாதை திட்டம் 2012ல் துவங்கியபோது வடமதுரையை ஹால்ட் ஸ்டேஷனாக தரம் குறைத்து திட்டம் தயாரிக்கப்பட்டது. அப்பகுதி மக்களின் விடாமுயற்சியால் கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய முழுமையான ஸ்டேஷனாக செயல்பட ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் தந்தது.
இதனால் இருவழி பாதை திட்டத்தில் இறுதியாக சேர்க்கப்பட்டு குறைந்த துார துணை பாதை, ஜல்லி டெப்போவுக்கு ஒரு பிட் லைன் மட்டும் கூடுதலாக அமைந்தது. வேக ரயிலுக்கு வழிவிடும் வகையில் குறைந்த வேக சரக்கு, பாசஞ்சர் ரயில்களை துணை பாதையில் நிறுத்தி வைத்து பின்னர் அனுப்பி வைக்கும் அளவிற்கு நீளம் இல்லை. இக்குறையால் அய்யலுாருக்கு அடுத்து தாமரைப்பாடியே உதவியது. இக்குறையை நீக்கும் வகையில் வடமதுரையில் இருக்கும் 3வது பாதையை மின்மயமாக்கலுடன் நீடிப்பு செய்ய ரூ.10.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்த டெண்டர் முடிந்து தற்போது மண் தளம் அமைக்கும் பணி நடக்கிறது.

