ADDED : பிப் 07, 2026 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு: எரியோட்டில் மதுபோதை வெறியில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்டதில் கட்டட தொழிலாளி கண்ணன் 37, இறந்தார்.
எரியோடு மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி கண்ணன் 37. மனைவியுடன் கரூர் அரவக்குறிச்சி பகுதியில் வசித்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் எரியோடு தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அய்யலுார் ரோட்டில் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடை பாரில் மது குடித்த நிலையில் குரும்பபட்டியை சேர்ந்த ஆனந்தராஜ் 32 ,என்பவருடன் தகராறு ஏற்பட்டது. அங்கு சமாதானம் செய்யப்பட்ட நிலையில் கண்ணன் அய்யலூர் ரோட்டில் வீட்டிற்கு நடந்து சென்றார். தொடர்ந்து சென்ற ஆனந்தராஜ் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் மீண்டும் தகராறு செய்து கல்லால் தாக்கியதில் கண்ணன் இறந்தார். எரியோடு போலீசார் ஆனந்தராஜை கைது செய்தனர்.

