ADDED : ஆக 15, 2025 02:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துாய்மை பணியாளர்களுக்காக தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள்,பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆதரவு போராட்டம் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் , அலுவலர்கள் சங்கம் சுப்பையா பேசினார்.
பேரூராட்சி ஊரியர்கள் சங்க மகாலிங்கம், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் சுகந்தி கலந்து கொண்டனர். நிர்வாகி உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.