நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் வளர்ச்சி கழகம், திண்டுக்கல் மாவட்ட யோகா போர்ட்ஸ் சங்கம் சார்பில், பழநியில் பள்ளி மாணவர்களுக்கான யோகாசன போட்டி நடந்தது. பழநியில் நடந்த 51வது தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஸ், 38வது தமிழ்நாடு யோகா ரேங்கிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன.
இதில் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் பகுதி பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் 8 வயது வரை மாணவர்களுக்கான போட்டி, 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப் பட்டன.
நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மாரியப்பன், தேசிய யோகா பெடரேஷன் உறுப்பினர் கரிகாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

