/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முயல் ரத்தத்தில் 'ஹேர் ஆயில்' தயாரிப்பு அம்மாபேட்டை அருகே அதிரடி ஆய்வு
/
முயல் ரத்தத்தில் 'ஹேர் ஆயில்' தயாரிப்பு அம்மாபேட்டை அருகே அதிரடி ஆய்வு
முயல் ரத்தத்தில் 'ஹேர் ஆயில்' தயாரிப்பு அம்மாபேட்டை அருகே அதிரடி ஆய்வு
முயல் ரத்தத்தில் 'ஹேர் ஆயில்' தயாரிப்பு அம்மாபேட்டை அருகே அதிரடி ஆய்வு
ADDED : பிப் 05, 2025 01:19 AM
முயல் ரத்தத்தில் 'ஹேர் ஆயில்' தயாரிப்பு அம்மாபேட்டை அருகே அதிரடி ஆய்வு
பவானி :ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டையில், கருடா ஹேர் ஆயில் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு முயல் ரத்தத்தில் ஆயில் தயாரிப்பதாக, நிறுவனத்தை நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார், 32, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளார். இதனால் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் பலர், மருந்து வாங்கி செல்வதாக தெரிகிறது. அதேசமயம் நிறுவனம் முறையான அனுமதி பெற்றுள்ளதா? என அப்பகுதி மக்கள் சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து சென்னை மருந்துகள் மற்றும் அழகு சாதன மருத்துவ துறை இயக்குனருக்கு புகார் போயுள்ளது.அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்ட உதவி இயக்குனர் ராம் பிரபு அறிவுரைப்படி, மருந்து ஆய்வாளர்கள் வெங்கடேஷ், அமுதா ஆகியோர், சிங்கம்பேட்டைக்கு நேற்று வந்து, மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் உரிய அனுமதி பெறாதது தெரிய வந்தது. இதையடுத்து ஹேர் ஆயில் பாட்டில்கள், மூலப்பொருள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். ஆய்வு கூடத்துக்கு ஹேர் ஆயில் அனுப்பி வைக்கப்படும். சோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, மருந்து ஆய்வாளர்கல் தெரிவித்தனர்.