/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீதிமன்றத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு முதியவர் சாவு
/
நீதிமன்றத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு முதியவர் சாவு
ADDED : ஜன 23, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீதிமன்றத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு முதியவர் சாவு
தாராபுரம்,:கோவை, ஆர்.கே. கார்டனை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 69. இவர், குண்டடம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள வழக்கு தொடர்பான விசாரணைக்காக, தாராபுரம், குற்றவியல் நீதிமன்றத்திற்கு, நேற்று வந்திருந்தார். மதியம், 2:00 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த போலீசார் அவரை, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.