ADDED : ஜன 23, 2025 01:19 AM
அ நிறம் | அளவு
தேர்தல் விதிமீறல் தொடர்பாக 12 வழக்குகள் பதிவு
ஈரோடு,: ஈரோடு மாநகரில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை, 12 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் பிரசார களம் சூடு பிடித்துள்ளது. கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி சுயேட்சைகளும் பிரசாரத்தை துவங்கி உள்ளனர். இந்நிலையில் தேர்தல் விதிமுறை மீறலில் ஈடுபட்ட தி.மு.க., - நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைவர் மீதும் பறக்கும் படை அலுவலர்கள் புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, இதுவரை தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக, 12 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
