ADDED : ஜன 29, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமணமான மகள் மாயம்; தாய் புகார்
பவானி, :சித்தோடு அருகே தண்ணீர்பந்தல்பாளையத்தை சேர்ந்த கண்ணன் மனைவி பிரியதர்ஷினி, 24; மாமரத்துபாளையத்தில் சிக்கன் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை கடையிலிருந்த பிரியதர்ஷினியை காணவில்லை. இதுகுறித்து அவரது தாய் வசந்தி கொடுத்த புகாரின்படி, சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர். பிரியதர்ஷினிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

