ADDED : பிப் 13, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குட்டையில் மூழ்கி முதியவர் சாவு
பெருந்துறை:பெருந்துறை, சிலேட்டர் நகர், சமாதானபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 68, கூலி தொழிலாளி. இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். எட்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட, வாகன விபத்து காரணமாக செல்வராஜ் புத்தி பேதலித்து இருந்தார். அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி, இரண்டு, மூன்று நாட்கள் கழித்து மீண்டும் திரும்பி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த, 10ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியவர். நேற்று வீட்டுக்கு அருகிலுள்ள குட்டையில் இறந்து கிடந்தார்.
பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

