/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒரே குடும்பத்தில் நால்வர் தற்கொலை: 4 பேரை கைது செய்த போலீசார்
/
ஒரே குடும்பத்தில் நால்வர் தற்கொலை: 4 பேரை கைது செய்த போலீசார்
ஒரே குடும்பத்தில் நால்வர் தற்கொலை: 4 பேரை கைது செய்த போலீசார்
ஒரே குடும்பத்தில் நால்வர் தற்கொலை: 4 பேரை கைது செய்த போலீசார்
ADDED : ஜன 23, 2025 01:19 AM
ஒரே குடும்பத்தில் நால்வர் தற்கொலை: 4 பேரை கைது செய்த போலீசார்
கோபி,: கோபி அருகே, ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவர்களை தற்கொலைக்கு துாண்டியதாக, நால்வரை சிறுவலுார் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே மீன்கிணறு பகுதியை சேர்ந்தவர் தனசேகர், 35. இவரது மனைவி பாலாமணி, 29. இருவரும் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்தனர். இவர்களுக்கு வந்தனா, 10, என்ற மகள், மோனீஷ், 7, என்ற மகன் இருந்தனர். கடந்த, 15ம் தேதி தனது தாய், தந்தை ஆகியோர் விஷம் சாப்பிட்டு விட்டதாகவும், தனக்கும், தம்பிக்கும், கூல்டிரிங்ஸில் செல்பாஸ் மாத்திரையை, அவர்கள் கலந்து கொடுத்து விட்டதாக, தனது பாட்டி பெரியகண்ணாள், 60, என்பவருக்கு பேத்தி வந்தனா போனில் தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெரிய கண்ணாள், பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சென்று பார்த்தபோது, தனது மகனும், மருமகளும் இறந்தது தெரியவந்தது. இந்நிலையில், சிகிச்சையில் இருந்த, அந்த இரு குழந்தைகளும் மறுநாள் இறந்தனர். இது குறித்து, சிறுவலுார் போலீசார் விசாரணை செய்தனர். இந்நிலையில், தனசேகர் குடும்பத்துடன் இறப்பதற்கான காரணம் குறித்து, ஏற்கனவே எழுதி வைத்த கடிதத்தை, அவரின் சகோதரர் தங்கராசு, 45, சிறுவலுார் போலீசில் ஒப்படைத்தார். அதில், 'தங்கள் இறப்புக்கு கடன் தொல்லை காரணம் என்றும், தங்களுக்கு சுய உதவிக்குழுக்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் மூலம், நால்வர் ஏஜென்டாக இருந்து கடன் பெற்று தந்தும், அதற்கு அதிக தொகையை அவர்கள் கமிஷனாக பெற்று ஏமாற்றியதால், மிகுந்த கடனுக்கு உள்ளானதால், தற்கொலை செய்து கொள்ள அவர்களே காரணம்' என, குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதத்தின் அடிப்படையில், 'சிறுவலுாரை சேர்ந்த சேது, 25, நாராயணசாமி, 52, வெண்ணிலா, 38, சுமதி, 40, ஆகியோரை சிறுவலுார் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். தற்கொலை செய்து கொண்டவர்களின் கடிதம் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில், அந்த நால்வரை கைது செய்ததாக, சிறுவலுார் போலீசார் தெரிவித்தனர்.

