sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொட்டித் தீர்த்தது மழை ஆறாக மாறிய ரோடுகள்

/

கொட்டித் தீர்த்தது மழை ஆறாக மாறிய ரோடுகள்

கொட்டித் தீர்த்தது மழை ஆறாக மாறிய ரோடுகள்

கொட்டித் தீர்த்தது மழை ஆறாக மாறிய ரோடுகள்


ADDED : ஜூலை 26, 2011 01:38 AM

Google News

ADDED : ஜூலை 26, 2011 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோடு: ஈரோடு மாநகரில் நேற்று பெய்த கனமழையால், பெருந்துறை ரோடு, பிரப் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய ரோடுகள் ஆறாக மாறின.

ஈரோடு மாவட்டத்தில் ஒருமாதமாகவே, பகலில் கடுமையான வெயிலும், மாலை நேரத்தில் மேகமூட்டமுமாக காணப்பட்டது. பகலில் அதிகப்படியான வெயிலால், மாலையில் கண்டிப்பாக மழை பெய்யும் என, நினைத்த பொதுமக்களை, மழை பெரிதும் ஏமாற்றியது. நேற்று மாலை 3 மணிக்கு வானில் மேக மூட்டங்கள் சூழ்ந்தன. வழக்கம் போல ஏமாற்றி விடும் என, மக்கள் நினைத்தனர். ஆனால், 4.30 மணிக்கு நல்ல மழை பெய்ய ஆரம்பித்து, ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்தது. பிரப் ரோடு, மேட்டூர் ரோடு, பஸ் ஸ்டாண்டு, பி.எஸ்.பார்க், ரயில்வே ஜங்ஷன் உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆறாக ஓடியது. சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை திட்டக் குழிகளில் தண்ணீர் தேங்கியது. பிரப் ரோடு டெலிஃபோன் பவன் எதிர்புறம், குளம் போல தேங்கியது. பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். ரோட்டில் சாக்கடையுடன் மழைநீர் தேங்காதவாறு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.








      Dinamalar
      Follow us