நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொபைல் கடை ஓனர் பலி
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த அலங்கியம், மேற்கு தெருவை சேர்ந்த கருணாகரன் மகன் விக்னேஸ்வரன், 27; தாராபுரத்தில் மொபைல்போன் கடை வைத்திருந்தார். வெள்ளகோவிலை சேர்ந்த இவரது நண்பர் பிரவீன்குமார், 27; இருவரும் பைக்கில் அலங்கியத்திலிருந்து, தாசநாயக்கன்பட்டி சாலையில் நேற்று சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்தில் பலியானார். பிரவீன்குமார் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

