ADDED : ஜன 22, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயில் மோதி தொழிலாளி பலி
ஈரோடு: ஈரோடு, கொல்லம்பாளையம் காட்டு தெருவில் வசித்த தொழிலாளி மூர்த்தி, 56; பொங்கல் பண்டிகைக்காக சகோதரி வீட்டுக்கு வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கம் இருந்தது. எட்டு ஆண்டாக காது கேட்காது. கடந்த, ௨௦ம் தேதி மதியம், ஊஞ்சலுார்-பாசூர் ரயில்பாதையை கடக்க முற்பட்டார். அப்போது ஈரோடு-செங்கோட்டை பாசஞ்சர் ரயில் மோதியதில் தலை துண்டாகி பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.