/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை கோவில்அறங்காவலர் குழு பொறுப்பேற்பு
/
சென்னிமலை கோவில்அறங்காவலர் குழு பொறுப்பேற்பு
ADDED : பிப் 14, 2025 01:15 AM
சென்னிமலை கோவில்அறங்காவலர் குழு பொறுப்பேற்பு
சென்னிமலை, :சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுவினர் நேற்று பொறுப்பேற்றனர்.
அமைச்சர் சாமிநாதன் பரிந்துரைப்படி, தலைவராக சென்கோப்டெக்ஸ் முன்னாள் மேலாளர் சென்னிமலை பழனிவேலு, உறுப்பினர்களாக முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் சென்னிமலை மனோகரன், சித்தோட்டை அடுத்த வேட்டை பெரியாம்பாளையம் பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளனர். மலை அடிவாரத்தில் உள்ள கோவில் அலுவலகத்தில், நேற்று பொறுப்பேற்று கொண்டனர். இவர்களுக்கு மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், ஈரோடு உதவி ஆணையர் சுகுமார், கோவில் செயல் அலுவலர் சரவணன், ஆய்வாளர்கள் மாணிக்கம், ஸ்ரீகுகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.