/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்காலில்தவறி விழுந்த வாலிபர் பலி
/
கீழ்பவானி வாய்க்காலில்தவறி விழுந்த வாலிபர் பலி
ADDED : பிப் 20, 2025 01:47 AM
கீழ்பவானி வாய்க்காலில்தவறி விழுந்த வாலிபர் பலி
கோபி:கோபி அருகே, கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த வாலிபர் பலியானார்.கோபி அருகே, எரப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் இளையமூர்த்தி, 28. இவர் கடந்த, 16ம் தேதி மில்மேடு என்ற இடத்தில், கீழ்பவானி வாய்க்கால் பாலத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது, வாய்க்காலில் தவறி விழுந்த இளையமூர்த்தியின் உடல், எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு காளிக்குளம் என்ற இடத்தில், இளையமூர்த்தியின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவரின் உறவினர் லதாமணி, 48, கொடுத்த புகார்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

