ADDED : பிப் 21, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக்குகள் மோதல்ஒருவர் பரிதாப பலி
தாராபுரம்:திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூளவாடியை சேர்ந்தவர் ராஜசேகர், 58; தாராபுரத்தில் இருந்து பைக்கில் ஊருக்கு நேற்று மதியம் சென்றார்.
பொன்னாபுரம் அருகே, உடுமலை, கோட்டமங்கலத்தை சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த பைக், ராஜசேகர் பைக்கில் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட ராஜசேகர் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்த புகாரின்படி தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.