ADDED : பிப் 23, 2025 01:41 AM
அ நிறம் | அளவு
பேப்பர் கப் தயாரித்தநிறுவனத்துக்கு அபராதம்
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி நான்காவது வார்டு சொட்டையம்பாளையத்தில், தனியார் நிறுவனம் ஒன்றில், அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரிக்கப்படுவதாக, மாநகராட்சிக்கு புகார் போனது. இதையடுத்து மாநகராட்சி சுகாதார அலுவலர் தங்கராஜ் தலைமையிலான ஆய்வாளர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரிப்பது தெரிந்து, 8.2 கிலோ பேப்பர் கப்பை பறிமுதல் செய்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
